பிரான்ஸ் போராட்டத்தில் கார் மோதியதில் பெண் விவசாயி மற்றும் மகள் பலி

பிரான்ஸ் விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டக்காரர்கள் மீது கார் மோதியதில் 30 வயது மதிக்கப்பத்தக்க பெண்ணொருவரும் அவரது 12 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பெண் விவசாயியின் கணவர் கடுமையான காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுளளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் பல நாட்களாக விவசாயிகள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகளுக்கு எதிராக இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலே, விவசாயிகளின் போராட்டத்தின் மீது கார் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது. இருப்பினும், குறித்த விபத்து திட்டமிட்டு நேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

Recommended For You

About the Author: admin