ஒருகோடி ரூபாய்க்கும் அதிகமான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருளுடன் 40 வயதுடைய பெண்ணொருவர் நேற்று (02) அதிகாலை புத்தளம் நாகவில்லு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய தகவல்

ஐஸ் போதைப்பொருளை மற்றுமொருவருக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு செல்லவிருந்ததாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சந்தேகநபரின் வீட்டினை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்ட போது குறித்த பெண்ணிடம் 1 கிலோ 8 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி

அத்துடன், கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor