இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.

மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு மக்களால் அமைக்கப்பட்ட மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறந்து வைப்பு.

மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் நினைவுச் சிலை மன்னார் ஜோசப் வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் ஜோசப் வாஸ் நகர் பங்கு மக்களால் அமைக்கப்பட்ட குறித்த நினைவுச் சிலையை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: webeditor