சீனா: பூட்டானை ஆக்கிரமிக்கும் முயற்சி அம்பலம்

பூடான் நாட்டுடன் ஒருபக்கம் எல்லை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை சீனா மேற்கொண்டு வருவது தெரியவந்துள்ளது.

இவ்விடயம் செயற்கைகோள் படங்கள் மூலமாக அம்பலமாகியுள்ளது.

ஆசியாவிலும், உலகளவிலும் யாராலும் அசைக்க முடியாத வல்லமை பொருந்திய நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற கனவுடன் சீனா தமது அரசியல் மற்றும் பூனோள நகர்வுகளை மேற்கொள்கிறது.

தெற்காசியா நாடுகளை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சீனாவிற்கு இதற்கு தடையாக இந்தியா கடும் சவாலாக உள்ளது.

சர்வதேச அளவிலும், பொருளாதார ரீதியாக இந்தியா சீனாவுக்கு கடும் போட்டியாக உள்ளது.

இதனால், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தந்திரங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசல பிரதேசத்தை தெற்கு தீபெத் என சீனா உரிமை கொண்டாடுகிறது.

இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அருணாசல பிரதேசத்தை ஒட்டி நவீன குடியிருப்புகளை அமைப்பது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவும் சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் தற்போது எல்லையில் நவீனமான முறையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது பூட்டானில் சில ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ள சீனா முயற்சித்து வருகிறது.

பூட்டானின் வடகிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருவது செயற்கை கோள் படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

பூட்டானின் கேன் பஜோங் பிராந்தியத்தில் உள்ள பேயுல் ஆற்று பள்ளத்தாக்கில் நகர குடியிருப்புகளை சீனா அமைத்து வரும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

பூட்டானை ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவுக்கு பூகோள ரீதியாக நெருக்கடி கொடுக்க சீனா முயற்ச்சிப்பதாக சர்வதேச வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin