ரணில் பக்கம் சாயும் மேர்வின்?

ராஜபக்சக்களை குடும்பத்தோடு கப்பலில் ஏற்றி நாடு கடத்துவோம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

“ராஜபக்சர்கள் அனைவரையும் நாட்டைவிட்டு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

ஊழல், மோசடி, கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் கப்பலில் ஏற்றி அனுப்புவோம்.

தனித்து நின்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். சிறந்த ஆளுமை மிக்கவர்கள் எம்முடன் ஒன்றிணைந்துள்ளனர்.

எந்த களமாக இருந்தாலும் நேருக்கு நேர் மோத தயாராக உள்ளேன். அதேபோல் எந்த தேர்தல் வந்தாலும் தெனை எதிர்கொள்ளவும் நாம் தயராகவே உள்ளோம்” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin