சிறைச்சாலைகளில் தொற்று நோய் பரவல்

சிறைச்சாலைகளில் தொற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் சுகாதார பிரிவு தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறைச்சாலை சுகாதர சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதன் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin