இலங்கையில் ஏழு இலட்சம் குடும்பங்கள் உண்பது கடனில்

இலங்கையில் 6 இலட்சத்து 97, 800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுக்காக கடன் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டில் வாழும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 31 இலட்சத்து 29 ஆயிரத்து 300 ஆகும. உணவுக்காகக் கடன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 22.3 சதவீதமாக இருப்பதாகப் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை, கிட்டத்தட்ட 370,000 குடும்பங்கள் கடனை மீளச் செலுத்துவதற்காக கடன் பெற்றுள்ளனர். 491,000 குடும்பங்கள் பொருளாதார தேவைகளுக்காக கடன் பெற்றுள்ளதாகவும் வசந்த அத்துகோரள தெரிவிக்கிறார்.

கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கும் புனரமைப்பதற்கும் 53,200 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளனர். 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் 688,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் நகைகள் அல்லது சொத்துகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர்.

970,000 குடும்பங்கள் அடமான நடவடிக்கை மூலம் கடன் பெற்றுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக 970,00 குடும்பங்கள் வங்கிகளிலும், 272,250 குடும்பங்கள் நிதி நிறுவனங்களிலும், 303,500 குடும்பங்கள் பண தரகர்களிடமிருந்தும் கடன் பெற்றுள்ளதாகவும் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin