யாழ் மதுபானசாலைக்கு எதிராக போராட்டம்: அனைவருக்கும் அழைப்பு

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலையினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த மதுபானசாலையை உடனடியாக அகற்றக்கோரி நாளை தினம் (03) காலையில் இருந்து மதியம் வரை கடைகளை பூட்டி எதிர்ப்பு தெரிவிக்க உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றாக சேர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வணிக நிலையங்கள், தனியார் கல்வி நிலையங்கள், சந்தை வியாபாரிகள் அனைவரும் இதற்கான ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டன ஆர்ப்பாட்டமும் உடுப்பிட்டி சந்தியில் இருந்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது

சமூக அக்கறை உள்ளவர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளது.

Recommended For You

About the Author: admin