பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரே வெளியிட்டுள்ளார்.
காஸாவில் நிலவும் போர் சூழ்நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ரெிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மக்கள் அனைவரும் பாலஸ்தீனத்தின் மோசமான சூழ்நிலையை மனதில் கொள்ள வேண்டும்.
இது காஸாவில் உள்ள நமது பாலஸ்தீன சகோதர சகோதரிகளுக்கான ஒற்றுமையைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பம்.
புத்தாண்டுக்கான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு அரசாங்கம் கடுமையான தடையை விதித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்கள் காரணமாக காஸாவில் இதுவரை 21 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலில் 9 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
காஸா மற்றும் மேற்குக் கரையில் நிராயுதபாணியான பாலஸ்தீனியர்கள் மற்றும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாகிஸ்தான் உட்பட முழு முஸ்லிம் சமூகமும் மன வேதனையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் பாகிஸ்தானில் பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிக ஆரவாரத்துடன் நடப்பதில்லை.
இஸ்லாமிய குழுக்களின் எதிர்ப்புகளின் பின்னணியில் புத்தாண்டு கொண்டாடங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.