மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை

இரத்தினபுரி – அலபத பிரதேசத்தில் உள்ள லயன் அறை குடியிருப்பின் அறை ஒன்றில் இருந்து தாய் மற்றும் அவரது சிறு மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் தனது மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், 21 வயதுடைய தாயும் 02 வயதுடைய சிறுவனும் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

இதனையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அலபத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin