800 பல்கலை பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

2023 ஆம் ஆண்டில் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

சுமார் 1000 பேர் வெளிநாடுகளில் விடுமுறையில் இருப்பதாக பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்தார்.

இதன் காரணமாக பல்கலைக்கழக கற்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் சுமார் 6200 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்நாட்டின் பல்கலைக்கழக அமைப்பில் பணியாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin