அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய டின் மீன் ஒன்றின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு 475 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 280 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிவப்பு பச்சை அரிசி கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 175 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், சிவப்பு பருப்பு, வெள்ளை நாட்டரிசி மற்றும் வெள்ளை பச்சை அரிசி ஆகியவற்றின் விலைகள் தலா ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை விலைக்குறைப்புடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin