துறைமுக அதிகாரசபையின் போராட்டம்: நீதிமன்றம் தடை உத்தரவு

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்கள் நாளைய தினம் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் துறைமுக ஊழியர்களின் சம்பள உயர்வு அறிவிக்கப்படவில்லை.

அதுதொடர்பான வேலைத்திட்டத்தை அடுத்த 7 நாட்களுக்குள் அறிவிக்குமாறும், இல்லையேல் 28ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக துறைமுக பொது ஊழியர் சங்க பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகான அண்மையில் தெரிவித்தார்.

இதனை முன்னிட்டு நாளை துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராக இருந்த நிலையிலேயே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin