கனடாவில் காணாமல் போன குடும்பம் சடலமாக மீட்பு

கனடாவில் காணாமல் போன குடும்பத்தார் அனைவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அல்பர்டாவின் Lac Ste. Anne County-ஐ சேர்ந்த கெல்லி (39), இவர் மனைவி லாரா (37), மகன் டைலன் (8) ஆகிய மூவரும் கடந்த 25ஆம் திகதி காணாமல் போனார்கள்.

இந்த நிலையில் மூவரும் அலெக்ஸிஸ் பாலம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர் பொலிஸார், தீயணைப்பு துறையினர், நீருக்கடியில் தேடும் மீட்புக்குழுவினர் என அனைவரும் சேர்ந்து சடலங்களை கண்டுப்பிடித்தனர்.

நீர் மற்றும் கரைக்கு இடையே கெல்லி, லாரா, டைலன் ஆகிய மூவரின் உயிரற்ற உடல்கள் கிடைத்தது அதற்கு அருகே அவர்களின் வாகனமும் நின்றிருந்தது.

மூன்று உடல்களும் எட்மண்டனில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் இந்த வார இறுதியில் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin