ஐந்து விளையாட்டுக் கழக உரிமை ரத்து: அமைச்சர் ஹரின் அதிரடி

இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் மூன்று விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் திருத்தம் மற்றும் 32 ஆவது சரத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் விபரம் வருமாறு,

*இலங்கை வில்வித்தை சங்கம்

*இலங்கை கபடி சம்மேளனம்

*இலங்கை மல்யுத்த சம்மேளனம்

*இலங்கை ப்ரிஜ் சம்மேளனம்

*இலங்கை தேசிய சக்கர காலணி சங்கம்

Recommended For You

About the Author: admin