பிரான்சில் தாய், பிள்ளைகள் உட்பட்ட ஐவர் படுகொலை

தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 33 வயதுடைய நபரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாரிஸின் வடகிழக்கில் 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள மீக்ஸில் உள்ள குடியிருப்பில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 10 மாதங்கள் முதல் 10 வயதுள்ள நான்கு குழந்தைகளே கொல்லப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தின் மத்தியில் சடலங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குழந்தைகளின் தந்தை அங்கிருக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்ய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சிசிடிவி காட்சிகளைப் பின்பற்றி சந்தேக நபரைக் கண்டுபிடித்த பொலிஸார், இறுதியில் அவரை கைது செய்தனர்.

கிறிஸ்மஸ் தினத்தன்று இரவு 9 மணியளவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin