ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவ சபையினை நியமிப்பதற்கு தீமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, புதிய தலைமைத்துவ சபைக்கு சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே, எதிர்வரும் தேர்தலில் போட்டியிடாத ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, ருவான் விஜேவர்தன, சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோரைக்கொண்டதாக புதிய தலைமைத்துவ சபை அமையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி மாநாட்டிலிருந்து முடிவுகளை எடுப்பதற்கும் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கும் பொறுப்பாக இந்த தலைமைத்துவ சபை அமைக்கப்படவுள்ளது.