அமெரிக்காவில் பொது மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் “ஹண்ஸ்டன்” பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பிற்கு தீ வைத்ததுடன் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 4 பேர் உயிரிழந்ததுடன் 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டு கொன்றுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்ததாகவும், 40 இருந்து 50 வரையான வயதெல்லைக்குள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சந்தேக நபர் பல இடங்களுக்கு இதற்கு முன்னரும் தீ வைத்துள்ளதாகவும் இதனால் காவல் துறையினரால் தொடர்ந்தும் தேடப்பட்டு வந்த ஒரு நபர் எனவும் தற்போது இவருடைய கதை முடிவுற்றுள்ளதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: webeditor