வார இறுதி நாட்களில் மின் விநியோகித்தடை இல்லை

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வார இறுதி நாட்களில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இலங்கை மின்சார சபைக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பரிமாறிப்பு பணிகளுக்காக மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வதேச வழிகாட்டல்கள் படி புதிய விதிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடிக்கடி ஏற்படுத்தப்படும் மின் விநியோகத்தடை குறித்து மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வார இறுதி நாட்களில் தேவையில்லாத பராமரிப்புப் பணிகள் காரணமாக பெருமளவு தொகையினை மேலதிக நேரக் கொடுப்பனவுக்காகச் செலவிட வேண்டியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin