மாணவர்கள் முன் அடித்துக்கொண்ட ஆசிரியர்கள்: ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களுக்கு இடையில் கிடையில் முரண்பாடு ஏற்பட்டு அது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மாணவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சிதம்பரபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin