கொரிய மொழி வகுப்புக்கு சென்ற யுவதிகளை காணவில்லை

குருநாகல் மாவட்டம் கலகெதர மற்றும் மாவத்தகமை பிரதேசங்களை சேர்ந்த இரண்டு யுவதிகள் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த யுவதிகள் கடந்த முதலாம் திகதி கொரிய மொழியை பயில்வதற்காக குருநாகல் நகரில் உள்ள வகுப்புக்கு சென்றதாகவும் அன்று சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேலும் இந்த யுவதிகளின் தொலைபேசிகளும் செயலிழந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மாவத்தகமை மற்றும் கலகெதர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin