இன்றைய வானிலை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (24) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

மத்திய மலை நாட்டின் கிழக்கு சரிவுகளில் அவ்வப்போது 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அதேநேரம், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor