தேவையற்ற பராமரிப்பை நிறுத்துமாறு மின்சார சபைக்கு அமைச்சர் உத்தரவு

வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறைக் காலங்கள் தடையற்ற மின்சார விநியோகத்தைப் பேணுவதற்காக அத்தியாவசியமற்ற பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட அனைத்து மின்சார திட்டங்களையும் இடைநிறுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் பதிவிட்டுள்ள செய்தியில்,

பராமரிப்புப் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின் தடைகள் குறித்த சர்வதேச வரையறைகளுக்கு இணையாக, இலங்கை மின்சார சபையின் nபாது முகாமையாளரால் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்.

பராமரிப்புப் பணிகளுக்காக அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக மின் நுகர்வோர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை ஆய்வு செய்த பின்னரே அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

வார இறுதி நாட்களில் பராமரிப்புக்காக தேவையற்ற திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளை அமைச்சு அவதானித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபைக்கு அதிக நேரக் கொடுப்பனவுகளுக்காக பெரும் தொகை செலவாகும். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin