சாட்சியங்கள் உறுதி செய்யப்பட்டால் கெஹலிய கைது செய்யப்படுவார்

தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவார் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்படுவாரா என ஊடகவியலாளர் ஒருவர் நேற்றைய ஊடகச்சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

“நடத்தப்படும் சி.ஐ.டி. விசாரணை மூலம் அமைச்சர் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால், அவரையும் கைது செய்வார்கள்.

ஆனால் ஆதாரம் இருக்க வேண்டும். அமைச்சரை கைதுசெய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் ஊடகங்களில் கூச்சல் இடுவதால் அது நடக்காது.” என்றும் அமைச்சர் டிரான் அலஸ் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin