நீண்ட விடுமுறை: இன்று முதல் விசேட இரயில் சேவை

நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று (22) முதல் விசேட இரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் கண்டியில் இருந்து பதுளை வரை விசேட இரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி இன்று இரவு 7.30 இற்கு விசேட இரயிலொன்று புறப்படவுள்ளது.

அத்துடன், மாலை 05.20 இற்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி மற்றொரு இரயில் சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் விசேட இரயில் எதிர்வரும் 23, 25, 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் காலை 07.30 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரத்தில் இருந்தும் விசேட இரயில் சேவைகள் இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin