ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது.
201 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்தே விமானிகள் மீண்டும் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர்.
விமானத்தை பழுதுபார்ப்பதற்காக வெளிநாட்டுக்கு கொண்டுசென்றால் பெரும் தொகையான நிதியை செலவு செய்யும் சூழ்நிலை காணப்பட்டதால் விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கியதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலைய முற்றத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
வேறு விமானங்களில் விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த பயணிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.