இலங்கைக்கு மேலும் 250 மில்லியன் டொலர்கள் நிதியுதவியினை உலக வங்கி வழங்கியுள்ளது.
குறித்த நிதியுதவியானது ஏற்கனவே இணங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிதி என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் திருப்திகரமான நடவடிக்கைகள் காரணமாக இந்த நிதி வழங்கப்பட்டிருப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.