உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களது அனுமதி அட்டைகளில் பாடம், மொழிமூலம், பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பின் அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதாவது எதிர்வரும் 22 ஆம் திகதி 12 மணிவரையில் இந்த திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor