ஜனவரியில் திட்டமிட்டப்படி தமிழரசு கட்சி மாநாடு: எம்.ஏ. சுமந்திரன் தகவல்

தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திருகோணமலையில் திட்டமிட்டபடி இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையில் இன்று அரசியல் உயர்மட்ட குழு கூட்டம் இடம்பெற்றது.

இக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ. சுமந்திரன் இதனை கூறினார்.

“கட்சி யாப்பின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.

விழா குழுவாக திருகோணமலை மாவட்ட கிளை செயற்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் எதிர்வரும் 2024 ஜனவரி 21 ஆம் திகதி பொதுச் சபை கூடி தலைவர் மற்றும் நிர்வாகிகளை தெரிவு செய்யவுள்ளோம்.

26 ஆம் திகதி மத்திய செயற்குழு கூடவுள்ளதுடன், 27 ஆம் திகதி பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளது. தொடர்ந்து 28 ஆம் திகதி இலங்கை தமிழரசு கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு இடம் பெறவுள்ளது” என எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin