ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருப்பம். எவ்வாறாயினும், மொத்த வாக்குகளில் குறைந்தது 51 வீதமான வாக்குகளைப் பெறுவது உறுதியானால் மாத்திரமே தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்’ என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தம்மிக்க பெரேரா, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தின் பல துறைகளிலும் கற்று அனுபவம் பெற்றவராவார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறப்படும் வேட்பாளர்களில் தம்மிக்க பெரேரா மாத்திரமே இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான குறிப்பிட்ட, நடைமுறை வேலைத்திட்டத்துடன் கூடிய செயற்திட்டமொன்றையும் முன்வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin