சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்

சபரிமலை பக்தர்களுக்காக, சேலம் வழியே சென்னை எக்மோர் – கோட்டயம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர்-கோட்டயம் சிறப்பு ரயில், டிச., 18, ஜனவரி 1, 29 ஆகிய திகதிகளில் இரவு 10:45 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே அடுத்தநாள் மதியம், 1:10 மணிக்கு கோட்டயம் சென்றடையும். சேலம் ஜங்சனுக்கு அதிகாலை, 4:32 மணிக்கும், ஈரோட்டுக்கு, 5:40 மணிக்கும் வந்து செல்லும்.

கோட்டயம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், டிச., 18, ஜனவரி 2, 30 ஆகிய திகதிகளில் இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு போத்தனுார், ஈரோடு, சேலம், காட்பாடி வாழியே அடுத்த நாள் காலை 10:30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். ஈரோட்டுக்கு அதிகாலை, 3:00 மணிக்கும், சேலம் ஜங்சனுக்கு 4:10 மணிக்கும் வந்து செல்லும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin