தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் கைது

தமிழ்நாட்டில், உணவகத்தின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள ஒரு துரித உணவகத்தின் பூட்டை மர்ம நபர் உடைத்து, கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதை கண்டதும் பொலிஸார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் இலங்கையை சேர்ந்த 48 வயதான சுரேஷ் எனத் தெரியவந்தது.

மேலும், இவர் கடந்த 2008ம் ஆண்டு தமிழகத்துக்கு வந்திருக்கிறார்.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட துரித உணவகத்தில் சுரேஷ் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சுரேஷை கைது செய்த காவல்துறையினர் கொள்ளை முயற்சி, அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Recommended For You

About the Author: admin