24 வயது இளம் விஞ்ஞானி தற்கொலை

இந்தியாவில் 24 வயதே ஆன இளம் விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் 24 வயதான பரத்.

இவர் ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு திரும்பிய பரத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அறிந்த பொலிஸார் பரத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், பரத் கடந்த வாரம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.

ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று முன் தினம் உயர் அதிகாரியுடன் போனில் பேசிய பின்னர் மன உளைச்சலில் இருந்த பரத் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin