காஸா மீதான போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது

பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல்-ஹமாஸூம் போா் நிறுத்தம் செய்துக்கொள்ள வேண்டும் என சா்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில்,அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் உரை அடங்கிய வீடியோவை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரை முற்றாக ஒழிக்கும் வரை இந்த போா் தொடரும். போரை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

போரில் ஏற்படும் இஸ்ரேலுக்கு ஏற்படும் இழப்புகள் காரணமாகவோ,சா்வதேச அழுத்தங்களை காரணமாக கொண்டோ காஸா மீதான போர் நிறுத்தப்பட மாட்டாது.

இறுதி வெற்றி கிடைக்கும்வரை போா் தொடரும்.போர் வெற்றியை விட குறைவான எந்த தீர்வையும் ஏற்க போவதில்லை என நெதன்யாகு உறுதியாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் கொரிக்கை விடுத்து வருகின்றன.

Recommended For You

About the Author: admin