தாயை தாக்கி விட்டு,17 வயது மாணவியை கடத்திய காதலன்

பகுதி நேர வகுப்புக்கு சென்று விட்டு தாயாருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த 17 வயதான மாணவியை அவரது காதலன் எனக்கூறப்படும் நபர், தாயை தாக்கி விட்டு, மாணவியை கடத்திச் சென்றதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என மத்துகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் மாணவி ஹொரணை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறார்.

அவர் தனது 44 வயதான தாயுடன் மத்துகமை பிரதேசத்தில் உள்ள தனியார் பகுதி நேர வகுப்புக்கு சென்றுள்ளார்.

வகுப்பு முடிந்து தாயுடன் திரும்பிச் செல்லும் வழியில் முச்சக்கர வண்டியில் மற்றுமொரு நபருடன் வந்த சந்தேக நபர், மாணவியின் கையை பிடித்து இழுத்து முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாக தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சம்பவம் நடந்த போது முறைப்பாட்டாளரான தாயும் முச்சக்கர வண்டியில் ஏற முயற்சித்துள்ளார்.அப்போது சந்தேக நபர், தாயை தாக்கி விட்டு தப்பிச் சென்றுளன்ளார்.

சந்தேக நபர் மற்றும் கடத்தச் செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மற்றும் கடத்திச் செல்லப்பட்ட மாணவியை கண்டுப்பிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Recommended For You

About the Author: admin