யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சாவுடன் குறித்த மாணவன் நேற்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாணவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.