அனுராதபுரம் வைத்தியசாலையில் தீ

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து கட்டிட வளாகத்தில் உள்ள நோயாளர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

Recommended For You

About the Author: admin