விவசாயிகளின் உர கொள்வனவுக்கு 10 பில்லியன் ஒதுக்கீடு

விவசாயிகளுக்கு தேவையான உரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 10 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு 2.3 பில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதன்படிஇ அரசாங்கம் வழங்கவுள்ள 10 பில்லியன் ரூபாவில் 5 பில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் விவசாயிகளின் கணக்குகளுக்கும், மீதி 5 பில்லியன் ரூபா எதிர்வரும் மாதத்திற்குள் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin