பொலிசாரால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு!

கிரிந்திவெல பொலிஸாரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரை பொலிஸார் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, ​​ கல்வெட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 27 வயதுடையவர் எனவும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் , மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் கம்பஹா பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

உயிரிழந்தவரின் சடலத்தின் பிரேதப் பரிசோதனையின் பின்னர் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor