குறைந்த கட்டணத்தில் இலங்கைக்கு ஆரம்பிக்கப்பட இருக்கும் விமான சேவை

அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவிற்கு புதிய குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆரம்ப விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

158 பயணிகள் மற்றும் 08 விமான ஊழியர்களுடன் எயார் அரேபியா 3L-197 விமானம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமான சேவை
இந்த விமானங்கள் வாரத்தின் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 08.00 மணிக்கு இலங்கை வந்தடையும்.

அதே விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இரவு 08.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor