நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது.

பதுளை, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல்சார் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
அத்துடன், கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த மிக்ஜம் சூறாவளி காரணமாக, மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor