விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்ததின நிகழ்வைக் கொண்டாடச் சென்ற பெண் கைது!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் அதிகாரிகளினால் பிரபாகரன் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் 43 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் (26.11.2023) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்

வாழைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண்ணிடம் பிறந்தநாள் கேக்கிற்கு மேலதிகமாக மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல பொருட்களும் காணப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாகரை துயிலுமில்லத்திற்கு அருகில் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருடன் போரிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் புதைக்கப்பட்ட வாகரை முன்மாரி மயானத்திற்கு அருகில் உள்ள வீதியில் பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவ்வழியாக கேக்குடன் சென்ற பெண்ணிடம் நடத்திய விசாரணையின்போது, ​​வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், மயானத்திற்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றதாக தெரியவந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்திருந்தார்.

தடுக்கப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டம்
பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு வேறு நபர்கள் மயானத்திற்கு வரவிருந்ததாகவும், ஆனால் பிறந்தநாள் கேக் மற்றும் பிற பொருட்களுடன் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதையடுத்து அதைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்க முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor