யாழில் நினைவேந்தலுக்கு தடை நிராகரிப்பு!

யாழில் நினைவேந்தல் உரிமையை தடைசெய்யும் பொலிஸாரின் இறுதிக்கட்ட முயற்சி சற்றுமுன்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நினைவேந்தலை தடை செய்ய கோரியும், சிவப்பு மஞ்சள் நிற கொடியை பயன்படுத்த கூடாது என உத்தரவிட கோரியும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் பொலிஸாரின் அந்த கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor