பணயக்கைதிகளுக்கு பதிலாக 39 பாலஸ்தீனியர்கள் விடுதலை

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்தமைக்கு பதிலாக , இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளது.

கல்வீச்சில் ஈடுபட்ட, மற்றும் கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களையே இஸ்ரேல் இவ்வாறு விடுதலை செய்துள்ளது.

அதன்படி 24 பெண்களையும் 15 பதின்மவயது இளைஞர்களையும் இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. மேற்குகரையின் பெட்டுனியா பகுதியில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என இஸ்ரேலின் சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலினால் தயாரிக்கப்பட்ட 300 பெண்கள் சிறுவர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin