யாழ் பற்றைக் காட்டினுள் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்பு!

யாழ்ப்பாணம், காரைநகரிலுள்ள பற்றைக் காடொன்றில் இருந்து, இன்று கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விவாரணை
குறித்த கேரளா கஞ்சா இன்று (2023.11.20) அதிகாலை 101 கிலோ 750 கிராம் நிறைகொண்ட சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே குறித்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: webeditor