கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்ட தமிழர் குறித்து வெளியாகியுள்ள மற்றுமோர் தகவல்!

கனடாவில் கடந்த வார இறுதியில் ஸ்காபரோ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை பகல் க்ளென் எவரெஸ்ட் சாலை மற்றும் கிங்ஸ்டன் சாலை பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு ரொறன்ரோ பொலிசார் விரைந்தனர்.

இதில் பலத்த காயங்களுடன் நபர் ஒருவரை ரத்த வெள்ளத்தில் மீட்டுள்ளனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார்.

பொலிசார் முன்னெடுத்த விசாரணையில் ரொறன்ரோவை சேர்ந்த 38 வயதான லியோன் டைரெல் என்பவரே மரணமடைந்துள்ளதாக அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 34 வயதான சதீஸ்குமார் ராஜரத்தினத்திற்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வியாழக்கிழமை பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், சதீஸ்குமார் ராஜரத்தினத்திம் கைதாகியுள்ளதாகவும் அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜரத்தினம் இன்று காலை 10 மணிக்கு ரொறன்ரோ நீதிமன்றில் ஆஜராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor