நல்லூரில் கந்தசஷ்டி உற்சவம் நான்காம் நாள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி நான்காம் நாள் காலை (17.11.2023) உற்சவ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

கந்தசஷ்டி விரதத்தில் அலங்காரக்கந்தன் உள்வீதியூடாக செந்தாமரைப்பீடத்தில் வீற்று காட்சியளித்தார்.

14.11.2023 அன்று கந்தசஷ்டி முதலாவது நாள் உற்சவ மாக ஆரம்பிக்கப்பட்டு இம்முறை நான்கு நாள் உற்சவ மாக காணப்படுவதுடன் ஐந்தாம் நாள் உற்சவமாக எதிர்வரும் 18.11 சூரசம்ஹார உற்சவம் இடம்பெற்று 19.11 மாலை திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று இனிதே உற்சவம் நிறைவடையும்.

இவ் உற்சவகிரியைகளை ஆலயபிரதம குரு சிவஸ்ரீ வைகுந்தகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள்
நடத்தி வைத்தனர்.

கந்தசஷ்டி விரத நான்காம் நாள் உற்சவத்தில் பலபகுதிகளில் இருந்து வருகைதந்த பக்தர்கள் இஷ்ட சித்திபெற்றுச் சென்றனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN