கைத்தொலைபேசி கொடுக்காத காரணத்தால் விபரீத முடிவெடுத்த சிறுமி!

கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் விபரீதமுடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார். உயிரிழந்த சிறுமியின் சடலம் கொழும்பு பொரல்லை சிறுவர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை
இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிபதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: webeditor