பன்னாலையில் குருபூசையும், சொற்பொழிவும்

பன்னாலையில் குருபூசையும், சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது
*********************
சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் முகமகாச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வாராந்த பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 30 ( சக்தி நாயனார் ) தெல்லிப்பளை பன்னாலை திருவருள் மிகு சிவபூதராயர் ஆலயப் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 03.11.2023 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சேக்கிழார் பெருமானின் குருபூஜையை தொடர்ந்து சொற்பொழிவினை இளஞ்சைவப்புலவர் த. மனோஜ்குமார் அவர்கள் ” சிவ பாதகம் செய்வோரைச் சக்தியால் தண்டித்த நாயனார் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவும், சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN