நீர்த்தொட்டியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலையில் நீர் தொட்டியில் விழுந்து 14 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, எத்தாபெதந்திவெவ பகுதியில் நேற்றிரவு (28) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த சனுக பாசன எனவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்த சிறுவன்
அச் சிறுவனின் தாய் உயிரிழந்ததாகவும், தந்தை பிள்ளைகளை விட்டுச்சென்று வேறு இடத்தில் வசித்து வருவதாகவும் அச்சிறுவன் தனது மாமாவின் வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வேளாண்மை செய்வதற்காக நீர் தொட்டியில் நெல் போடப்பட்டிருந்ததாகவும் அதற்குள் இறங்கி விளையாடிக்கொண்டிருந்த போது விழுந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அச் சிறுவனுக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருப்பதாகவும் தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: webeditor